Friday, September 17, 2010






விழியில் வழியும் விழிநீர் பெண்பாவம்!
[தெளிவானது,தெரிவது ]
விழியோரம் விழாமல் நிற்கும் விழிநீர் ஆண்பாவம்!
[வேதனை,தெரிந்தும் மறைக்கபடுவது]
பெண்கள் செய்யும் தவறுகளை அதாவது ஒரு ஆண்மகனை அடிப்பது, ஏசுவது என்பதை ஒரு வேடிக்கை அல்லது கேளிக்கயாகவே ஏன் சித்தரிக்கிறார்கள்! அப்படியும் மீறி ஒரு ஆண்மகன் தன் கவலைகளை தன் நண்பனிடம் கூறினால் சமுதாயம் சொல்கிறது "பெண்டாட்டியை அடக்க தெரியாதவன் இவன் எல்லாம் ஆண்மகனா?" உடனே அவன் ஈகோ தலையெடுக்கும் அப்புறம் என்ன?வீட்டிலே ச ரி க ம ப த நி ச தான்.. சமீபத்தில் ஒரு நண்பர் கூறியது ஒரு வீட்டில் மனைவி கணவனை தினமும் கொடுமை படுத்தி இருக்காங்க அனால் மாறாக கணவன் மேல் குற்றம்சொல்லி இருக்காங்க "என் கணவனின் கொடுமை தாங்க முடியல எனக்கு விவாகரத்து கொடுக்க வேண்டும்" என!

இப்போதான் சட்டம் வந்து விட்டதே! பெண்கள், தங்களை தன் கணவன் கொடுமை படுத்துவதாக கூறினால் அப்பீல் ஏதும் இல்லை உடனே ஆண்மகனை தூக்கி ஜெயிலில் போட்டு சாத்து! அவரின் கணவன் வீட்டிலே கேமரா வைத்து தினம் நடப்பதை படமாக எடுத்து போலீஸ் இடம் ஒப்படைத்து இருக்கிறார்! தற்கால நிலைமை இப்படி உள்ளது. கணவன் என்கிற ஆண்மகன் எதுவரை பொறுத்து போவார் [பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது மறந்துட்டார் போல]

பெண்களுக்கு கொடுக்கப்படும் சலுகைகளை சிலர் இப்படி பயன்படுத்துகிறார்கள், பெண்களின் ஆயுதம் முன்பு எல்லாம் கண்ணீராக இருந்தது. இப்போ இப்படி அநீதி என்கிற போர்வையை கணவனுக்கு போர்த்தி கருணை என்கிற பெயருக்கு களங்கம் செய்கிறார்கள் சில பெண்கள்...சிலர் ஆறுதல் என்கிற பெயரில் பலரின் வாழ்க்கையிலும் விளையாடுகிறார்கள்..

இக்கால சில இளம் பெண்கள் ஒருபடி மேலே, பஞ்சாப் கேசரி என்கிற நியூஸ் பேப்பர் இல் சில இளம் பெண்கள் சொல்லி இருக்காங்க "எங்களுக்கு above 40 or 45 வயது ஆண்களிடம்தான் அதிக விருப்பம்" அதற்க்கு அவர்கள் சொல்லும் காரணம் "இளம் ஆண்களுக்கு வேலை தேடும் Struggle , செலவு செய்வதில் யோசனை, உண்மையான அன்பு இல்லாமை, பல நண்பிகளிடம் பழக்கம், சுய சொத்து இல்லாமை இன்னும் பல.. இதை படித்து Shock ஒருபுறம், வேதனையான புன்னகை ஒருபுறம், இதுவும் ஒரு பெரிய காரணமா இருக்கு பல வீடுகளில் கணவன் மனைவியின் பிரிவு!
இதை படித்து பெண்ணே பெண்களின் எதிரி என்பதுபோல சிலர் நினைக்கலாம், நான் கூறவருவது இப்படி பெண்கள் மாறியதற்கு ஆண்களும் ஒருவிதத்தில் காரணம் தானே! ஆண்களுக்கும் எதிர்பார்ப்புகள் இருக்கு, ஆசைகள் இருக்கு என வெளிப்படையாக ஏன் அவர்கள் சொல்வதில்லை தான் ஆண் என்கிற [ஈகோ], ஆண் என்பவன் பலசாலி, எதையும் சாதிப்பவன் என்கிற அளவுகடந்த நம்பிக்கை, இது உலகம் அறிந்த உண்மைதான். அப்படியும் சில இடங்களில் இன்னமும் ஆண்கள் தற்கொலை செய்வது அதிகரிக்கிறது அனால் அதிகம் விஷயங்கள் வெளிவருவதில்லை ஏன் இப்படி?

ஆண்களும் கொஞ்சம் மனம் திறவுங்களேன் எண்ணங்களை சொல்லுங்களேன் , நான் அழசொல்லவில்லை, மற்றவரிடம் கருணை கேட்டு நிற்க சொல்லவில்லை, தன்னை பற்றி பேசுவதில் ஆண் என்கிற கர்வம் வேண்டாமே!


KRSHI!

Tuesday, July 27, 2010

மாதா ,பிதா, குரு, தெய்வம் !

மாதா, பிதா, குரு தெய்வம் !

நம் முன்னோர்கள் மாதா,பிதா குரு,தெய்வம்!என்று கூறியது அனைவரும் அறிந்ததே!கடவுளை கூட குருவுக்கு பிறகுதான் குறிப்பிடுகிறார்கள் அப்படி இருக்க சில தவறான புரிந்துகொள்ளுதலால் ஆசிரியர்களை தான் அனைத்து தவறுக்கும் காரணம் என நினைப்பது கொஞ்சம் யோசிக்க வேண்டியதாக உள்ளது.
தற்சமய சட்ட திட்டபடி பள்ளியில் படிக்கும் மாணவர்களை தவறு செய்தால் கூட ஆசிரியர்கள் தண்டிக்க கூடாது என்கிற ஆணை பிரபிக்கப்பட்டுள்ளது இது யாவரும் அறிந்ததே, இதில் எதிர்மறை,நேர்மறை மாற்றங்கள் ஏற்படலாம்,பலனும் பல,பாதிப்புகளும் பல,

இந்த சட்டத்தின் காரணமாக மாணவர்கள் ஆசிரியர்கள் பயம் இல்லாமல் படிக்கும் நிலை வரவேற்க்ககூடியது மேலும் படிப்பில் பின் தங்கிய சில மாணவர்கள் சில ஆசிரியர்களின் பயம் தெளிந்து தன் வாதங்களை தையிரியமாக கேட்க முயல்வார்கள்.

இப்போதும் பல பள்ளிகளில் சில ஆசிரியர்கள் அதிகம் கண்டிப்பு இல்லாமலே அவர்களின் தேர்வு முடிவுகள் முழு சதவீதம் உள்ளது காரணம் அவர்கள் பாடம் நடத்தும் முறை தெளிவாக இருப்பதுதான். தோழமையுடன் பழகும் முறை,சில ,பல உதாரணங்களை அழகாக விளக்கும் முறை,இப்படி உள்ள வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்களிடம் மரியாதை கலந்த நட்புடன் பாடவிளக்கங்களை கேட்க்கிறார்கள் படிக்கிறார்கள்

அதே நேரம் சில ஆசிரியர்கள் தன் வகுப்பு மாணவர்கள் சரியாக பாடங்களை கவனிக்கவில்லை என்றாலும்,படிக்கவில்லையென்றலும் அதிகம் கவனம் செலுத்தப்போவதில்லை, அப்படியே ஆசிரியர்கள் பெற்றொர்களை சந்திக்கும்படி தகவல் அனுப்பினாலும் சில மாணவர்கள் பயத்தின் காரணமாக தன் பெற்றொர்களிடம் சரிவர தெரிவிப்பதில்லை இதில் பொய் சொல்லும் பழக்கம் வளர வாய்ப்புகள் அதிகம், ஆசிரியர்களும் அடுத்து எந்த முயற்சியும் எடுப்பதில்லை பெற்றொர்களை சந்திக்கும் வரை! இதில் மறைமுக பதிப்பு மாணவர்களுக்கே !

ஆசிரியர்களை காரணம் சொல்லி மிரட்டி படிக்கவைக்கும் நிலை போய் தற்சமயம் மாணவர்கள் பெற்றொர்களை காரணம் சொல்லி ஆசிரியர்களை மிரட்டும் நிலை ,இதிலும் பாதிப்பு மாணவர்களுக்கே!

மாணவர்களுக்கு கொடுக்கும் தண்டனை என்பது பிள்ளைகளுக்கு பயன் உள்ளதாகவும்,அதே நேரம் மீண்டும் அந்த தவறை செய்ய கூடாது என்கிற மன நிலையும் அந்த மாணவர்களுக்கு வர வேண்டும் சில காரணங்களால் ஓர், இரு நாட்கள் பள்ளிக்கு வரமுடியாமல் போகும் மாணவர்கள், அல்லது படிப்பில் கவனக்குறைவாக உள்ள மாணவர்கள், வீட்டு பாடங்களை சரிவர செய்யாமல் வரும் மாணவர்களுக்கு அதே வீட்டு பாடங்களை இரு முறை அல்லது மூன்று முறை எழுதசொல்ல வேண்டும் அப்படியும் சில மாணவர்கள் வீட்டு பாடங்களை சரிவர செய்வதில்லை. இவர்களுக்கு அந்த வகுப்பு ஆசிரியர்கள் பள்ளி நேரம் முடிந்ததும் [மாலையில்] ஒரு அரைமணி நேரம் அதிகமாக அந்த பிள்ளைகளுக்கு தன் அருகில் வைத்து அந்த பாடங்களை எழுத சொல்லலாம் பல முறை எழுத சொல்வதால் அவர்களுக்கு அந்த பாடப்பகுதி மனதில் நன்றாகப்பதியும், அவர்கள் கை எழுத்தும் சீராகும் மேலும் மாலை நேரம் என்பது அவர்கள் விளையாட்டு நேரம் என்பதால் நம் விளையாட்டு நேரம் வீணாகிவிட்டதே என்கிற காரணத்தால் கண்டிப்பாக அவர்கள் மீண்டும் தவறு செய்ய யோசிப்பார்கள்.

வகுப்பில் பாடம் நடத்தும் போது கவனிக்காத பிள்ளைகளை அடுத்த நாள் வகுப்பில் இந்த பாடங்களை அவர்களே படிக்க வேண்டும் என்று கூறலாம் [கண்டிப்புடன் படிக்க சொல்லவேண்டும்] அல்லது தொலைகாட்சியில் செய்திகள் சேகரித்து வர சொல்லி வேலை கொடுக்கலாம் இதன் காரணமாக அவர்கள் பொது அறிவும் பெறுவார்கள், “என்னடா இது நம் அம்மாவே தொலைகாட்சி ஒரு மணி நேரம் தான் பார்க்க அனுமதிகிறார்கள் இதில் செய்தி வேறு சேகரிக்க வேண்டுமே” என்கிற நிலையில் கொஞ்சம் வகுப்பில் பாடங்களை கவனிக்கலாம் இதெல்லாம் நடக்குமா என கேட்காதீர்கள், முயற்சி செய்வதில் தவறு இல்லையே!

படிப்பில் கவனக்குறைவாக உள்ள சில மாணவர்களை சார்ட்டில் [Chart] அட்டவணை செய்ய சொல்லலாம், முக்கியமான பாடபகுதிகளை விளக்கமாக வரைந்து வர சொல்லலாம் இதனால் அந்த பிள்ளைகள் அறிவும் பெறுவார்கள்,வகுப்பில் தாழ்வுமனப்பான்மை என்கிற எண்ணமும் ஏற்படுவதில்லை.ஒரு ஆசிரியர்க்கு தன் வகுப்பில் 70% மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்களை 90% அல்லது 100% மதிப்பெண்கள் வாங்க வைப்பது என்பது மகிழ்ச்சிக்குறியது ஆனால் அதே வகுப்பில் உள்ள 30% அல்லது 40% மதிப்பெண்கள் வாங்கும் மாணவர்களை 70% அல்லது 80% மதிப் பெண்கள் வாங்க வைப்பதில்தான் வெற்றியின் மகிழ்ச்சி.

இன்றைய வாழ்க்கை முறையில் [நேரமின்மை,இயந்திர வாழ்க்கை முறை] கணவன் ,மனைவி இருவரும் உத்தியோகம் செய்பவர்கள் இதில் அவர்கள் தன் பிள்ளைகளை சரிவர கவனிக்க இயலாத நிலை அதனால் டிவிஷன் என்கிற குட்டி பள்ளிக்கு அனுப்ப நிர்பந்திக்க படுகிறார்கள். டிவிஷனிலும் மாணவர்களுக்கு அடி,உதை என தண்டணை கிடைகிறது.சில கண்டிப்பு மிக்க பெற்றொர்களும் காரணம் அவர்கள் பிள்ளைகள் தவறான முடிவு எடுப்பதற்க்கு! ஆசிரியர்களை மட்டுமே காரணம் என சொல்வது தவறான கண்ணொட்டம்,

மேலும் சில ஆசிரியர்கள் தன் சொந்த பிரச்சனைகள் ,வேலைகள் அனைத்தையும் பள்ளிக்கு கொண்டு வந்து அதே மன நிலையுடன் பாடம் நடத்தும் போது தன் கோபங்களை மாணவர்களிடம் காண்பிக்கிறார்கள், இயற்கையிலேயே தன்னை விட பலம் குறைந்தவரிடம் வேகம் கட்டுவது மனிதனின் இயல்பு, இப்படியும் சில மாணவர்கள் பாதிக்க படுகிறார்கள்,எப்படி இருந்தாலும் இனி மாணவர்கள் ஆசிரியர்கள் பயம் இல்லாமல் சுதந்திரமாக படிப்பது வரவேற்க்க கூடியது…

கற்க கசடர கற்பவை கட்ற பின்,
நிற்க அதற்க்கு தக!

நம்புவோமே! நம்பிக்கை வைப்போமே!

KRSHI!

Friday, June 25, 2010

சிரிப்பு!






சிரிப்பு என்பது உலகில் வாழும் அனைத்து உயிரினங்களில் மனிதர்களுக்கு மட்டுமே கிடைத்த கடவுளின் வரம் அல்லது மனிதர்களின் சிறப்பம்சம் எனவும் தெரிந்ததே!மனிதன் விலங்குகளிடம் இருந்து தான், தான் வாழும் முறைகளை கற்று கொண்டான் ..அனால் சிரிப்பு இயற்கையாகவே அவனுக்கு மட்டுமே கிடைத்தது,அப்படியிருக்க!

சில [மிக சில] மனிதர்கள் சிரிப்பா? அது என்ன? என்று கேட்கும்படி நடந்து கொள்வது ஏன் புரியவில்லை! தற்சமய வாழ்க்கை முறையும் ஒரு காரணமாக இருக்கலாம் பலர் சிரிக்க நேரமில்லை என "Loughing Club " செல்கிறார்கள்..." நான் என்ன பைத்தியமா? தேவை இல்லாமல் சிரிக்க" என சொல்லும், பிற்காலத்தில் பைத்தியமாக போகும் பைத்தியமல்லாதவர்களை பற்றி நான் குறிப்பிடவில்லை ...

"வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் " என நம் முன்னோர்கள் கூறியது தவறு, என்று கூறுவது போல மகிழ்ச்சியான தருணங்களிலும் சிலர் மனதில் சிரிப்பு வந்தாலும் வெளிக்காட்டாமல் கடனே என புன்னகைப்பார்கள், ஏன்? புரிவதில்லை.. சிலர் அவசியமே இல்லாமல் "ஈஈ" என இளிப்பார்கள்..[கடவுளே இவர்களுக்கு ஏன் சிரிப்பை கொடுத்தாய் ? என்று என்ன தோணும்]

ஒரு மாதகுழந்தை ,இரண்டு மாதகுழந்தை பார்த்திருப்பீர்கள் ...அழும், சிரிக்கும்...அனால் சிரிக்கும் போது மட்டுமே அனைவரும் ஆனந்தமாக சொல்வார்கள் ஏன்? மகிழ்ச்சியில் கத்தவே செய்வார்கள் ஏதோ பார்க்காததை பார்த்தது போல! சிரிப்பு வாழ்வில் இன்றியமையாதது .

குழந்தையின் ஒரு சிரிப்புக்காக நாம் என்ன என்ன செய்கிறோம் சிரிப்பு ஒரு இன்றியமையாத இயற்கை,ஒரு இளம்பெண்ணின் சிறிய புன்னகைக்காக அவன் நண்பனோ? காதலனோ? என்னவெல்லாம் செய்ய தயாராக இருக்கிறார்கள்? [என்ன சிரிப்பு வருகிறதா?]

சிரிப்பு ஒரு பரிசு போன்றது! சிரிக்கும் போது நம் உடலில் 300 தசைகள் அசைகின்றன. தசைகள் புத்துணர்வு பெறுவதால் உடலிலும், மனதிலும் உள்ள அழுத்தங்களும், கவலைகளும் போகின்றன!சிரித்தால் வயது குறையும் என சொல்ல காரணம் இதுவும் ஒன்று ,மேலும் ஆனந்தமாக கூறும் வார்த்தைகளில் இதுவும் ஒன்று " நல்ல சிரித்த முகம்."

"கொஞ்சம் சிரிங்களேன் ,சிரிக்க வைங்களேன்"

KRSHI!


Wednesday, June 23, 2010

"ஐயா" செம்மொழி பரிசு !




ஐயா ! என்கிற இந்த தமிழ் சொல் மிக மரியாதைக்குரிய சொல் அதை சரிவர பயன்படுத்தாமல் மழுங்கி ,மரியாதை கொடுக்க முடியாதவர் ,அல்லது மரியாதையை கொடுக்க தெரியாதவர் பயன்படுத்தும் செம்மொழியாக மாறிவிட்டது.

இப்படியாக யோவ் ,போயா ,வாயா என்று அழைப்பது! ‘டா’ ,’டி’ சொல்லை விட தரக்குறைவானது.இதில் இன்னும் பெரிய விஷயம் என்னவென்றால் இப்படி "ஐயா" என்பதை ‘போயா’, ’வாயா’ என்று மாற்றியவர்கள்,அல்லது அந்த சொல்லை பயன்படுத்துபவர்கள் அதிகம் அரசாங்கத்தில் பணிபுரிபவர்கள் என்பது குறிப்பிட தக்கது .

இந்த சொல்லை செம்மொழி ஆக்கிய தமிழர்களுக்கு இச்செம்மொழி மாநாட்டில் பரிசு என்ன ?

KRSHI!

Saturday, June 19, 2010

Santa ,Panta Sardars...


பஞ்சாப் என்றதும் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஐந்து
நதிகள் சர்தார் ,பசுமை ஆம் மிக மிக பசுமை வாய்ந்த பூமி!
பஞ்சாப் இல் விவசாயம் மிக அதிகம் சர்தார்கள் அதிக உழைப்பாளிகள் ...
பஞ்சாப் மண்வளம், மிகவும் வளம் , வலிமை & பசுமை .

சர்தார்களை ஏன் நாம் கேளிக்கை பொருளாகவே பார்க்கிறோம் சீக்கிய
மதம் நம் ஹிந்துக்களை காப்பதற்காகவே உருவானது [குரு நானக் ஜி ] சொல்லபோனால் நம் இந்தியாவில் அதிக மரியாதை தருபவர்களும் ,
அன்பாக இருப்பவர்களும் ,மிகுந்த உழைப்பாளிகளாக இருப்பவரும்
பஞ்சாப் மக்களே ..

தமிழுக்கு சமமாக, ஏன்! அதிகமாகவே வெளிநாடுகளில் சென்று
உழைத்து பஞ்சாப் போலவே பசுமையாக வாழ்பவர்கள் ....உலகில் உள்ள மதங்களில் எப்பொழுது வேண்டும் என்றாலும் மக்கள் மதம் மாறிக்கொள்ளலாம் ஆனால் சீக்கிய மதத்தில் மாறமுடியாது அதற்க்கு அவர்கள் உடன்படுவதில்லை.. பிறப்பில் வேறு மதத்தினராக இருந்தால் நாம் சீக்கியராக மாற முடியாது .

சீக்கிய மதத்தில் உள்ளவர்கள் ஹிந்து மதத்தில் மணம் முடிப்பார்கள் வேறு
மதத்திலும் மணம் முடிப்பார்கள் அனால் ஹிந்துவையோ வேறு மதத்தினரையோ சீக்கியராக மதத்தில் இணைப்பதில்லை மேலும் உண்மையான சீக்கியர்கள் ஐந்து பொருட்களை மிக புனிதமாக கருதுவார்கள் .. எல்லாமே "K" என்கிற எழுத்தில் ஆரம்பம் ஆகும் ....

1.Kada [கைகளில் அணியும் வளையம் ]
2.Kirpan [ இடையில் தொங்கும் கத்தி ]
3.Kesh [தலைமுடி ]
4.Kanga [சீப்பு ]
5.Kachcha [ கச்சை ]....
புனிதமாக கருதும் வண்ணத்தையும் இங்கு குறிப்பிடுகிறேன்
6.Keshar [ஆரஞ்சு வண்ணம் ]

நாம் கோவிலுக்கு செல்வதில் பல கட்டுப்பாடுகள் இருக்கிறது
விரதம் இருந்து செல்ல வேண்டும், இந்த நாழி போக கூடாது, அந்த நாழி போக கூடாது என...சீக்கிய மதத்தில் கோவிலை "குரு துவாரா "
என்று அழைப்பார்கள்.
கடவுளின் வாசல் ...குரு துவாரா செல்ல ஒரே ஒரு கட்டுபாடுதான் உண்டு அது தலையில் கண்டிப்பாக துணி கட்டி செல்வது.
எந்த சீக்கிய கோவிலுக்கு சென்றாலும் கண்டிப்பாக லங்கர் என சொல்லப்படும் அன்னதானம் இருக்கும் பணக்காரன் ,ஏழை என்கிற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒன்றாக செய்யப்படும் உணவு.. அதில் பெண்கள் ஆண்கள் என அனைவரும் சேவை செய்வார்கள்.
வேலைகாரகள்,சமையல்காரி என யாரும் குறிப்பிட்டு கிடையாது சேவையை
புண்ணியமாக கருதுவார்கள் சீக்கிய மதத்தில் சொல்லப்படுவது
முதலில் "Bagad" [ பக்தனின் சேவை ],பிறகுதான் "Sagad" [கடவுளுக்கு சேவை ]இன்னும் நிறைய சொல்லாம் அவர்கள் வாழும் முறை ஒரு சின்ன சின்ன விசயத்திற்கும் மகிழ்ச்சியாக ஒன்று கூடி ஆடி,பாடி மகிழ்வார்கள் .

நாம் அனைவரும் அறிந்தது ...அனைத்து மதத்தில் இருந்தும் கடவுள் போல வேடமிட்டு தொலைகாட்சி,சினிமா போன்றவற்றில் நடிப்பார்கள் சீக்கிய
மதத்தில் அப்படி செய்யவே கூடாது,செய்ய முடியாது அது மதத்தின் அவமானம் என கருதுவார்கள் ஏனெனில் ?கடவுள் போல மாறமுடியாது கடவுள்தான் உண்மை என்கிற பக்தி ...

நம்மில் பலர் அவர்களை [சீக்கியர்களை ] கேளிக்கையாக சித்தரிக்கிறோம் அவர்கள் அப்படி செய்வதும் இல்லை செய்பவர்களை குறை சொல்பவரும் இல்லை மாறாக அவர்களும் ரசிக்கிறார்கள். அதே மற்ற வட மாநிலங்களில் வாழும் மக்கள் !

தமிழர்கள் பேசும் ஹிந்தியை ,கலாச்சாரத்தை [ பூ வைப்பது ,மஞ்சள் பூசுவது] கண்டபடி கேளிக்கையாக சித்தரிப்பார்கள் [கோபம், கோபமாக வரும் பலமுறை தவறை உணர்த்தி இருக்கேன் [[வாய்பேசி].. இனியும் "Santa ,Panta " படித்து ரசிக்கும் போது அதே நேரம் நல்ல செய்திகளையும் யோசிக்கலாமே!


WAHE GURU JI KA KHALSA !
WAHE GURU JI KI FATHE!
KRSHI!