
பஞ்சாப் என்றதும் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஐந்து
நதிகள் சர்தார் ,பசுமை ஆம் மிக மிக பசுமை வாய்ந்த பூமி!
பஞ்சாப் இல் விவசாயம் மிக அதிகம் சர்தார்கள் அதிக உழைப்பாளிகள் ...
பஞ்சாப் மண்வளம், மிகவும் வளம் , வலிமை & பசுமை .
சர்தார்களை ஏன் நாம் கேளிக்கை பொருளாகவே பார்க்கிறோம் சீக்கிய
மதம் நம் ஹிந்துக்களை காப்பதற்காகவே உருவானது [குரு நானக் ஜி ] சொல்லபோனால் நம் இந்தியாவில் அதிக மரியாதை தருபவர்களும் ,
அன்பாக இருப்பவர்களும் ,மிகுந்த உழைப்பாளிகளாக இருப்பவரும்
பஞ்சாப் மக்களே ..
தமிழுக்கு சமமாக, ஏன்! அதிகமாகவே வெளிநாடுகளில் சென்று
உழைத்து பஞ்சாப் போலவே பசுமையாக வாழ்பவர்கள் ....உலகில் உள்ள மதங்களில் எப்பொழுது வேண்டும் என்றாலும் மக்கள் மதம் மாறிக்கொள்ளலாம் ஆனால் சீக்கிய மதத்தில் மாறமுடியாது அதற்க்கு அவர்கள் உடன்படுவதில்லை.. பிறப்பில் வேறு மதத்தினராக இருந்தால் நாம் சீக்கியராக மாற முடியாது .
சீக்கிய மதத்தில் உள்ளவர்கள் ஹிந்து மதத்தில் மணம் முடிப்பார்கள் வேறு
மதத்திலும் மணம் முடிப்பார்கள் அனால் ஹிந்துவையோ வேறு மதத்தினரையோ சீக்கியராக மதத்தில் இணைப்பதில்லை மேலும் உண்மையான சீக்கியர்கள் ஐந்து பொருட்களை மிக புனிதமாக கருதுவார்கள் .. எல்லாமே "K" என்கிற எழுத்தில் ஆரம்பம் ஆகும் ....
1.Kada [கைகளில் அணியும் வளையம் ]
2.Kirpan [ இடையில் தொங்கும் கத்தி ]
3.Kesh [தலைமுடி ]
4.Kanga [சீப்பு ]
5.Kachcha [ கச்சை ]....
புனிதமாக கருதும் வண்ணத்தையும் இங்கு குறிப்பிடுகிறேன்
6.Keshar [ஆரஞ்சு வண்ணம் ]
நாம் கோவிலுக்கு செல்வதில் பல கட்டுப்பாடுகள் இருக்கிறது
விரதம் இருந்து செல்ல வேண்டும், இந்த நாழி போக கூடாது, அந்த நாழி போக கூடாது என...சீக்கிய மதத்தில் கோவிலை "குரு துவாரா "
என்று அழைப்பார்கள்.
கடவுளின் வாசல் ...குரு துவாரா செல்ல ஒரே ஒரு கட்டுபாடுதான் உண்டு அது தலையில் கண்டிப்பாக துணி கட்டி செல்வது.
எந்த சீக்கிய கோவிலுக்கு சென்றாலும் கண்டிப்பாக லங்கர் என சொல்லப்படும் அன்னதானம் இருக்கும் பணக்காரன் ,ஏழை என்கிற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒன்றாக செய்யப்படும் உணவு.. அதில் பெண்கள் ஆண்கள் என அனைவரும் சேவை செய்வார்கள்.
வேலைகாரகள்,சமையல்காரி என யாரும் குறிப்பிட்டு கிடையாது சேவையை
புண்ணியமாக கருதுவார்கள் சீக்கிய மதத்தில் சொல்லப்படுவது
முதலில் "Bagad" [ பக்தனின் சேவை ],பிறகுதான் "Sagad" [கடவுளுக்கு சேவை ]இன்னும் நிறைய சொல்லாம் அவர்கள் வாழும் முறை ஒரு சின்ன சின்ன விசயத்திற்கும் மகிழ்ச்சியாக ஒன்று கூடி ஆடி,பாடி மகிழ்வார்கள் .
நாம் அனைவரும் அறிந்தது ...அனைத்து மதத்தில் இருந்தும் கடவுள் போல வேடமிட்டு தொலைகாட்சி,சினிமா போன்றவற்றில் நடிப்பார்கள் சீக்கிய
மதத்தில் அப்படி செய்யவே கூடாது,செய்ய முடியாது அது மதத்தின் அவமானம் என கருதுவார்கள் ஏனெனில் ?கடவுள் போல மாறமுடியாது கடவுள்தான் உண்மை என்கிற பக்தி ...
நம்மில் பலர் அவர்களை [சீக்கியர்களை ] கேளிக்கையாக சித்தரிக்கிறோம் அவர்கள் அப்படி செய்வதும் இல்லை செய்பவர்களை குறை சொல்பவரும் இல்லை மாறாக அவர்களும் ரசிக்கிறார்கள். அதே மற்ற வட மாநிலங்களில் வாழும் மக்கள் !
தமிழர்கள் பேசும் ஹிந்தியை ,கலாச்சாரத்தை [ பூ வைப்பது ,மஞ்சள் பூசுவது] கண்டபடி கேளிக்கையாக சித்தரிப்பார்கள் [கோபம், கோபமாக வரும் பலமுறை தவறை உணர்த்தி இருக்கேன் [[வாய்பேசி].. இனியும் "Santa ,Panta " படித்து ரசிக்கும் போது அதே நேரம் நல்ல செய்திகளையும் யோசிக்கலாமே!
WAHE GURU JI KA KHALSA !
WAHE GURU JI KI FATHE!
KRSHI!
No comments:
Post a Comment