சிரிப்பு என்பது உலகில் வாழும் அனைத்து உயிரினங்களில் மனிதர்களுக்கு மட்டுமே கிடைத்த கடவுளின் வரம் அல்லது மனிதர்களின் சிறப்பம்சம் எனவும் தெரிந்ததே!மனிதன் விலங்குகளிடம் இருந்து தான், தான் வாழும் முறைகளை கற்று கொண்டான் ..அனால் சிரிப்பு இயற்கையாகவே அவனுக்கு மட்டுமே கிடைத்தது,அப்படியிருக்க!
சில [மிக சில] மனிதர்கள் சிரிப்பா? அது என்ன? என்று கேட்கும்படி நடந்து கொள்வது ஏன் புரியவில்லை! தற்சமய வாழ்க்கை முறையும் ஒரு காரணமாக இருக்கலாம் பலர் சிரிக்க நேரமில்லை என "Loughing Club " செல்கிறார்கள்..." நான் என்ன பைத்தியமா? தேவை இல்லாமல் சிரிக்க" என சொல்லும், பிற்காலத்தில் பைத்தியமாக போகும் பைத்தியமல்லாதவர்களை பற்றி நான் குறிப்பிடவில்லை ...
"வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் " என நம் முன்னோர்கள் கூறியது தவறு, என்று கூறுவது போல மகிழ்ச்சியான தருணங்களிலும் சிலர் மனதில் சிரிப்பு வந்தாலும் வெளிக்காட்டாமல் கடனே என புன்னகைப்பார்கள், ஏன்? புரிவதில்லை.. சிலர் அவசியமே இல்லாமல் "ஈஈ" என இளிப்பார்கள்..[கடவுளே இவர்களுக்கு ஏன் சிரிப்பை கொடுத்தாய் ? என்று என்ன தோணும்]
ஒரு மாதகுழந்தை ,இரண்டு மாதகுழந்தை பார்த்திருப்பீர்கள் ...அழும், சிரிக்கும்...அனால் சிரிக்கும் போது மட்டுமே அனைவரும் ஆனந்தமாக சொல்வார்கள் ஏன்? மகிழ்ச்சியில் கத்தவே செய்வார்கள் ஏதோ பார்க்காததை பார்த்தது போல! சிரிப்பு வாழ்வில் இன்றியமையாதது .
குழந்தையின் ஒரு சிரிப்புக்காக நாம் என்ன என்ன செய்கிறோம் சிரிப்பு ஒரு இன்றியமையாத இயற்கை,ஒரு இளம்பெண்ணின் சிறிய புன்னகைக்காக அவன் நண்பனோ? காதலனோ? என்னவெல்லாம் செய்ய தயாராக இருக்கிறார்கள்? [என்ன சிரிப்பு வருகிறதா?]
சிரிப்பு ஒரு பரிசு போன்றது! சிரிக்கும் போது நம் உடலில் 300 தசைகள் அசைகின்றன. தசைகள் புத்துணர்வு பெறுவதால் உடலிலும், மனதிலும் உள்ள அழுத்தங்களும், கவலைகளும் போகின்றன!சிரித்தால் வயது குறையும் என சொல்ல காரணம் இதுவும் ஒன்று ,மேலும் ஆனந்தமாக கூறும் வார்த்தைகளில் இதுவும் ஒன்று " நல்ல சிரித்த முகம்."
"கொஞ்சம் சிரிங்களேன் ,சிரிக்க வைங்களேன்"
KRSHI!