Tuesday, November 19, 2013

திகட்டும் அல்வாக்கே திருட்டு அல்வா!


                        நம் நாட்டின் அரசியல் வாதிகளின் கட் அவுட் படம்,அவர்களின் வரவேற்புக்காக செய்யப்படும் செலவுகளை [இன்னும் பல] கணக்கில் கொள்ளாமல்,அத்தியாவச பயன்பொருள்களான சமையல் வாயு,பெட்ரோல்,விலை ஏற்றம்,வங்கி கடன்,வீட்டு கடனில் அதிகமான வட்டி,என நடுத்தர வர்க்க மக்களை வைத்து நாட்டின் சிக்கனத்தை நிர்ணயிப்பது நம் நாட்டில் மட்டுமே பிரசித்தி இன்னும் சில வருடம் போனால் நடுத்தர வர்க்க மக்கள் Grocery,Condiments பொருட்கள் எல்லாம் EMI யில் வாங்க வேண்டி இருக்கும்,

                       மக்களிடமே பணம் வாங்கி [வருமான வரி] மக்களுக்கே இலவச பொருட்கள் விநயோகிப்பது [அல்வக்கே அல்வா] நம் நாட்டில் மட்டுமே இது பிரசித்தி, வழி கடை தேங்காயை பிள்ளையாருக்கு உடைத்து புண்ணியம் பெறுவது போலநம் நாட்டின் கடனை நடுத்தர வர்க்கம்தான் சரி செய்ய வேண்டுமா? நம் நாட்டை "மிக சிறப்பாக வழி" நடத்தும் அரசியல்வாதிகள் சிக்கனமாக இருக்க கூடாதா?

                       அந்த கால அரசர்கள் போல மாறு வேடத்தில் இரவொ,பகலோ ஊர்வலம் வந்து நாட்டை கண்காணித்து மக்கள் குறை தீர்க்க வேண்டிய அளவு மக்களை பற்றிய தகவல்கள் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை, மக்களை தொடர்பு கொள்ள பல வழிகள் தற்காலத்தில் இருக்கு அப்படி இருந்தும் ஒன்றுமே தெரியாதது போல நம் அரசியல்வாதிகள் நடப்பது, கண்கள் இருந்தும் கறுப்பு திரையிட்டு நாடகமாடும் நடிப்பு குருடர்கள் போல,

KRSHI!


No comments:

Post a Comment