
கணபதியை சிலர் பிரம்மச்சார கடவுள் எனவும் சிலர் மணம் முடித்தவர் எனவும் சொல்வாங்க வட இந்தியாவில் அவரை மணம்முடித்த கடவுளாகதான் சொல்கிறார்கள் கணபதின் மகள் தான் இந்த சந்தோஷி மாதாஜி எனும் அம்மன் கணபதிக்கும் அவரின் மனைவியான ரித்திக்கும் பிறந்தவர்தான் இந்த சந்தோஷி மாதாஜி.
வட இந்தியாவில் உள்ள பெண்கள் அதிகம் வெள்ளிகிழமையில் விரதம் இருந்து வணங்குவது இந்த அம்மனை [இப்போதும் கொஞ்சம் கொஞ்சமாக தென் இந்தியாவிலும்] 16 வாரங்கள் விரதம் இருந்து 16 வது வெள்ளிகிழமை அன்று அம்மனுக்கு பூஜைகள் செய்து, 8 ஆண்,1 பெண் [boys & girl not men & women] சிறிய குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து பூரி,அல்வா[கேசரி] பிரசாதம் அளித்து விரதத்தை முடிப்பார்கள் இந்த 16 வெள்ளிகிழமைகளிலும் புளிப்பு கலந்த உணவை உண்ணக்கூடாது என்பது இந்த விரதத்தின் முக்கிய கட்டுப்பாடு, அதே நேரம் விரதம் இருப்பவர் 16 வாரங்களும் சந்தோஷி மாதாஜி யின் கதையை கண்டிப்பாக படிக்க வேண்டும் என்பதும் ஒரு வேண்டுகோள்! 16 வெள்ளிகிழமையும் அம்மனுக்கு வெல்லமும் கடலையும் பிரசாதாமாக படைப்பார்கள்
[உண்ணுவது என்னமோ நாம் தான் hahaha] இந்த அம்மனை வணங்குபவர்கள் வீட்டிலும் வாழ்க்கையிலும் சந்தோசம் பெருகும் கவலைகள் அண்டாது என்பதும் மிக மிக உண்மை!
KRSHI!
No comments:
Post a Comment