
அனைவரும் அறிந்தது தீபாவளி இந்தியாவில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகை ஒவ்வொரு வருடமும் தீபாவளி விஜயதசமி யில் இருந்து சரியாக 20 நாளில் வரும். நவராத்திரி என கொண்டாடப்படும் அதே நாட்களில் தானே ராம் ராவணனுடன் போர் நடந்ததாக கதைகள் [அதர்மத்திற்கு எதிராக தர்மத்தின் வெற்றி] வட இந்தியாவில் பல மாநிலங்களில் விஜயதசமி கொண்டாடுவார்கள் UP,MP,DELHI,HARYANA etc....
விஜயதசமியின் 10 ஆம் நாள் ராவணனின் உருவ பொம்மையை எரிப்பார்கள் ஸ்ரீராம் வேடமிட்ட ஒருவர் அம்பு ஏய்து முன்பே தயார் நிலையில் இருக்கும் எரிபொருள் அடங்கிய ராவணனின்உருவத்தை எரிப்பார். அன்றில் இருந்து 20 ஆம் நாள் தீபாவளி அதாவது ராவணனை வென்று சீதையை மீண்டும் அயோத்திக்கு அழைத்து வரும் நாள்தான் தீபாவளி மஹாலட்சுமி வருகைதரும் நாள். [சீதை= மகாலட்சுமி]
நாம் இங்கு கொண்டாடும் தீபாவளியை [Chotti Deebavali என்று சொல்வார்கள் அமாவாசைக்கு முன் தினம்] தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பு தன்த்ராஸ்என சொல்வார்கள் [Dhanthras ] அன்று இங்கு நாம் சொல்லும் அக்ஷய திருதியை போல புதிய பொருட்கள் அல்லது தங்கம், வெள்ளி என வாங்குவார்கள் முக்கியமாக ஸ்டீல் பாத்திரம் கண்டிப்பாக வாங்குவாங்க அதில் தான் தீபாவளி அன்று மகாலட்சுமிக்கு பிரசாதம் படைப்பார்கள் வீட்டை சுற்றிலும் விளக்குகள் ஏற்றி மாலையில் தான் பூஜை செய்வார்கள் மகாலட்சுமி தன் வாசல் வருவாங்க என்ற பலத்த நம்பிக்கை ராவணனை ஸ்ரீராம் வென்றது ஸ்ரீலங்காவில் [தென் இந்தியா] இங்கிருந்து வட இந்தியா [அயோத்தியா] செல்ல ஒரு குறிப்பிட்ட மணி நேரம் ஆகி இருக்கும் அதுதான் நாம் முதலிலே தீபாவளி கொண்டாடி விடுகிறோமா?
மேலும் தீபங்கள் வீட்டை சுற்றிலும் ஏற்றப்படுவதற்கு இன்னொரு கதையும் உண்டு, நம் முன்னோர்கள் மகாளய அமாவசை அன்று நம்மை சந்திக்க வருவார்கள் என்ற கதை உண்டு இல்லையா? மகாளய அமாவசை அன்று வந்தவர்கள் தீபாவளியின் போது வரும் அமாவசைக்குதான் மீண்டும் மேலோகம் செல்வார்களாம் [நான் சொல்லலப்பா] அப்படி நம் முன்னோர்கள் மேலோகம் செல்ல அவர்களுக்கு ஒளி வெள்ளமாக அந்த தீபங்கள் ஏற்றபடுகின்றன எனவும் சொல்வார்கள்...
KRSHI!
No comments:
Post a Comment