Wednesday, June 1, 2011

"அழகு வேலனை பற்றி!"



அழகா வேல் அழகா
வேல் பிடிக்கும் கரம் அழகா
உன் விழி அழகா
உன் முகம் அழகா
கண் வியப்புடன் நோக்கும் திருமுருகா
என பாடி துவங்குகிறேன்!

தமிழ்க்கடவுள் முருகன் அழகும் அன்பும் வீரமும் விவேகமும் இன்னும் பல
அவரின் அருளை சொல்லி அவரை பற்றி பாடல்கள் உள்ளன இனியும் தொடரும் முருகருக்கு 600 க்கும் மேற்பட்ட திருபெயர்கள் உண்டு
அழகின் பிரபஞ்சம் பார்வதிக்கும் வீரத்தின் பிரபஞ்சம் சிவனுக்கும் பிறந்த புதல்வர் அல்லவா,

வட இந்தியாவில் முருகபெருமானை கார்த்திக் என மட்டுமே அறிவார்கள், சிவன் பார்வதியின் பெரிய புதல்வர் என கூறுவார்கள் நாம் இளையவர் என்போம் அங்கு முருகருக்கு கோவில்கள் அதிகம் இல்லை என்றே சொல்லாம் வட இந்தியர் அதிகம் முருகபெருமானை வணங்குவதில்லை செவ்வாய் கிழமைகளில் பவன் புத்திரர் அனுமான் கடவுளுக்குதான் விரதம் மேற்க்கொள்வார்கள்

முருகனை பலர் வட இந்தியாவில் பிரமச்சாரி எனக்கூட கூறுவர்
அவரை போர்க்கு உரிய கடவுளாகத்தான் எண்ணுகிறார்கள் இந்திரரின் படைக்கு சேனாபதி என மேலும் 'முருகா' என்றால் இந்தியில் சேவல் என பொருள் சேவல் கொடியோன் என்பதாலா?
KRSHI!

No comments:

Post a Comment