Wednesday, June 1, 2011

"காளி அம்மனை பற்றி!"



சர்வ மங்கள மாங்கல்யே!
சிவே சர்வாத சாதிக்கே!
சரண்யே திரையம்பிகே கெளரி!
நாரயணி நமோஷ்துதே!!!

பயத்தை போக்கி அச்சம் தவிர்க்கும் காளி அம்மன் இவர் ஈசனின் [காளனின்] மனைவியான ஆதிபராசக்தி, இந்தியாவில் காளி அம்மனை அதிகம் வணங்குவது மேற்கு வங்காளத்தில்தான். கருமை நிறம், இரத்தகரையுடன் சிவந்து வெளியே தள்ளி இருக்கும் நாக்கு என அச்சம் ஊட்டும் உருவம், உண்மையில் அவர் தன் நாவை வெளியே தள்ளி காட்சி தருவது கோபத்தினாலோ நம்மை அச்சுறுத்தவோ அல்ல உலகில் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்ட அம்மன் எடுத்த அவதாரம் தான் காளி மாதா!

சண்டு,முண்டு,சும்பு,னிசும்பு,ரக்தபீஜ் ஆகிய அசுரர்களை அழித்து கோபம் தீராமல் ஆக்ரோஷமாக தன் எதிரில் வருபவர்களை எல்லாம் காலால் மிதித்து அழித்து கொண்டே வருகிறார் அவரின் கோபத்தை தணிக்க சிவபெருமான் அவர் வரும் வழியில் குறுக்காக விழுகிறார் அதை கவனிக்காமல் அம்மன் சிவனையும் காலால் மிதித்து அழிக்க பார்க்கையில் ”ஹையோ” இது என்ன அந்த பரம் பொருளே,என் ஈசனே என் காலடியில் என அதிர்ச்சியில் நாக்கை கடித்து கொண்டு அதே ரூபத்தில் கோபம் தணிந்து நிற்பதுதான் காளியின் உருவம்....

[ஹ்ம்ம் இப்போ எல்லாம் தெரிந்து கால் பட்டாலும் தெரியாமல் கால் பட்டாலும் திரும்பி அப்படியே ஒரு பார்வை பார்த்துட்டு போவதுதான், திரும்பி பார்க்கிறார்களே அதே அதிகம்... என்ன முழிக்கறிங்க நானும் தான் இதில் உள்ளடக்கம் ]
KRSHI!

No comments:

Post a Comment