
அறிவை கொடுப்பவளும் அறிவை வளர்ப்பவளுமாகிய
கலைமகள் என போற்ற படும் சரஸ்வதிக்கு நிறைய பெயர்கள் உண்டு பக்தேவி, பிராஜ், சாரதா, பிரம்மி, சத்ருப, மகாஸ்வேதா, சர்பசுகிய, ப்ரிதுதர், பகிஸ்வரி,கலைவாணி....
நாம் [தென் இந்தியாவில்] சரஸ்வதி பூஜை நவராத்ரி பண்டிகையின் நவமி அன்று கொண்டாடுவோம் வட இந்தியாவில் சரஸ்வதி பூஜை மாசி மாதம் பஞ்சமிதிதி [Jan-Feb அமாவாசைக்கு அடுத்து வரும் பஞ்சமி திதி] அன்று கொண்டாடுவார்கள் வட இந்தியர் சரஸ்வதியை துர்கையின் மகள் என நம்புகின்றனர் [மகாலக்ஷ்மியையும்].
இந்து கடவுள்களில் அவதாரம் எடுக்காத ஒரே கடவுள் சரஸ்வதி என்பது குறிப்பிதக்கது ஆழ்கடலில் அமுதம் கடையும் போது கடலில் இருந்து அமுத கலசத்துடன் மகாலட்சுமி வெளிப்பட்ட போது அசுரகளை அமுத கலசத்தில் இருந்து திசை திருப்ப சரஸ்வதி வெளிபட்டார் என்கிற கதையும் உண்டு, நாம் மஹவிஷ்ணுதான் மோகினி யாக வந்து திசை திருப்பியதாக சொல்கிறோம்
மேலும் சரஸ்வதி என்பவர் ஒரு நதி எனவும் நாம் அறிந்தது.
ஒரு முறை சரஸ்வதி நதி கரையில் ஆரியர்களும் ஆரியர் அல்லாதவரும் [நிஷேத்,சபர்,புளிந்தர்] போர் புரிந்த போது,விஷ்ணு பகவான் கேட்டு கொண்டதன் பேரில் சரஸ்வதி நதி மறைந்து விட்டதாக ஒரு வரலாறு, [நீர் இல்லையேல் போர் எங்கனம் என] மேலும் விஷ்ணுவின் மனைவிகள்தான் கங்கா,சரஸ்வதி,லக்ஷ்மி [ரொம்ப ஓவர் இல்ல] எனவும் கதை.
கலைமகள் ஊமையான காளிதாஸை பெரிய புலவராக மாற்றியவர் என்பதும் நமக்கு தெரியும் அதே நேரம் காளிதாஸ் சரஸ்வதியை புகழ்ந்து பாடுகையில் ஒருமுறை சரஸ்வதின் அழகை தவறாக பாடியதால் சரஸ்வதி கோபம் கொண்டதால் காளிதாஸ் குற்ற உணர்வால் மீண்டும் ஊமையானர் என்பதாகவும் கதை..
KRSHI!