
"ரக்ஷ ரக்ஷ ஜெகன் மாதா
சர்வ சக்தி ஜெய துர்கா!"
ராகு காலத்தில் பூஜை செய்தால் நினைத்தது நிறைவேறும் கஷ்டங்கள் சோர்வடைந்து காணாமல் போகும் என்பது உண்மை நவகிரங்களின் ஒரு கிரகமான ராகு தேவன் மனிதர்களை சோதனை கொடுப்பாராம் துர்க்கை அம்மன் ராகுவின் பலம் முழுக்க தன்னுள் வாங்கி /எடுத்து கொண்டவராம் அதனால் அம்மனை மீறி ராகு தேவன் மனிதர்களுக்கு சங்கடங்கள் கொடுப்பதில்லை என்பதால் அந்த ராகு காலத்தில் நாம் அம்மனை வணங்கினால் அம்மனின் அருள் கிடைப்பதோடு ராகு தேவனின் சங்கடங்கள் நம்மை பாதிப்பதில்லை என்பது நம்பிக்கை
துர்கா பூஜை என மேற்கு வங்காளத்தில் 10 ௦ நாட்கள் மிக விசேஷமாக நடைபெறும் பண்டிகை நவ துர்கைகள் ஷைலபுத்ரி, பிர்மாசாரிணி,சந்திர காந்த,குஷ்மந்த, ஸ்கந்த மாதா, காத்யாயினி, காலராத்ரி, மகாகௌரி, சித்திதாத்ரி, என்பது 10 ஆம் நாள் விஜயதசமி அன்று [விஜய் = வெற்றி தசமி =10 ஆம் நாள்] வெற்றியை கொண்டாடி காளி பூஜை செய்து பண்டிகை முடியும்.
தீபாவளிக்கு முன்வரும் அஷ்டமி திதியில் தன் பிள்ளைகளுக்காக விரதம் மேற்கொள்வார்கள் சிலர் வருடம் முழுதும் கூட அஷ்டமி திதி விரதம் இருப்பவரும் உண்டு நவமி என்பது மகாலக்ஷ்மிக்காக அஷ்டமி என்பது மஹாகெளரிக்காக, நவமி என்பது மஹாசரஸ்வதிக்காக என்று சொல்வார்கள் நாமும் நவராத்ரியில் நவமி அன்றுதானே சரஸ்வதி பூஜை செய்கிறோம்.
KRSHI!
எட்டை எல்லோரும் வெறுப்பர் உலகில். ஆனால் இந்த எட்டு தான் நம்மை ஆள்கிறது.
ReplyDeleteஇன்று அஷ்டமி நல்ல காரியம் செய்ய கூடாது என்கின்றனர். அஷ்டமியில் தானே கண்ணன் பிறந்தான். கண்ணன் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடுகிறோமே!
எட்டாக உள்ள கண்கள் தான் கண்ணன் இருப்பிடம், இதுவே ஞானம்!
நம் முன்னோர்கள் பலரும் இந்த எட்டை பலபல பரிபாஷையில் பாடி உள்ளனர். இரண்டு பூஜியத்தை தொட்ட படி போட்டால் அது எட்டு. நிமிர்ந்து நின்ற 8 ஐ படுக்க வைத்தால் போல் ! இரண்டு கண்கள் போல் உள்ளது அல்லவா?
"பூஜ்யத்துகுள்ளே ஒரு ராஜ்யத்தை ஆண்டு கொண்டு புரியாமல் இருப்பன் ஒருவன் அவனை புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்" என கவியரசு கண்ணதாசன் பாடியுள்ளார்.
http://sagakalvi.blogspot.in/2012/04/blog-post_16.html